மனிதனுக்குள் உள்ள மனிதன் இறைவன் அவன் உள் இருப்பதை உணர்ந்து, உண்மையான திருவடியின் துணை கொண்டு உள்ளத்தை தெளிவுபடுத்தி சோக நிலையைத் தவிர்த்து ஏகம் என்னும் பரம்பொருளில் கரைந்து, சிவபுரம் என்னும் முக்தி வீடு பெற வேண்டும் என்பதே வாழ்கையின் இலட்சியமாகும்.
இதற்காக அண்டிவரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக இருந்து செயல்படுகிறேன். இதில் அநேகவிதமான சோதனைகளைக் கடக்க வேண்டியதுள்ளது எல்லாம் அவன் செயலே.
அன்பன்
தவயோகி
பாலுசாமி
இது ஐயாவே கைப்பட எழுதியது
(பாலுசாமி என்றுதான் ஐயா கையெழுத்திடுவார்.)
ஸ்ரீலஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள்
வாழ்க்கையில் உண்மையையும் யதார்த்தத்தையும் கடைப்பிடித்து, என்னையே நம்பியிருக்கும் பக்தர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன்.